யாரடி நீ பெண்ணே. .??

Posted: Tuesday 16 October 2012 by துருவன் in Labels:
0

நாணம் 
அவள் 
முகத்துக்கான ஆடை. .

காமம் 
அற்ற நட்பை
 கொடையென 
கொணர்ந்தவள். .

பேய்கள் சில
 உலவும் பாரினில்
 பெண்ணென 
பிறப்பெடுத்த வரம் 
அவள். .

காதல் 
அரும்பும் கணங்களிலும் 
கபடமற்ற
அன்பை
 இதயத்தில் விதைப்பவள். .


வறண்ட பாலையிலும்
வற்றாத தென்றல்
 அவள் என்பேன். .

அழும்போதெல்லாம் 
அன்னையின் மடிக்கு 
அடுத்து
அவளின் 
அரவணைப்பு அழகென்பேன். .


எதிர்பார்ப்புகள் இல்லாமல்
ஏமாற்றங்கள் தராமல்
இதழோரம் எப்போதும் 
புன்னகையை பொதிப்பவள். .


நானாக நானிருக்க
நடிப்புகள் அற்ற
நட்பை 
வெளிக் கொணர்ந்தவள். .

ஆகக் 
கடைசியில். .

ஆயிரம் பெண்கள்
இனி எனக்கமைந்தாலும்
 என் தோழி 
உனை யாரும் 
தொட்டு வீழ்ந்த இயலாதடி. .

0 comments:

Ads 468x60px

Social Icons


Animated Social Gadget - Blogger And Wordpress Tips