தலைப்பிட தெரியாதவை . .

Posted: Tuesday 16 October 2012 by துருவன் in Labels:
0

பெண்ணாக நீ பிறந்ததற்கும்,
ஆணாக நான் பிறந்ததற்கும்,
'காதல்' என பெயரிடவா?

தனது தேவை என்னவென்று
கேட்டு வாங்க தெரியாத
'குழந்தை' என் காதல். .

மெலிதாய் ஒரு 'புன்னகையும்',
மீட்சி விரும்பாத ஒரு
'பார்வையும்' போதுமடி அதற்கு. .

உன் மௌனங்களால் என் மனம்
சப்தமிட்டு அழுகின்ற நேரம் 'இரவுகள்' என்றால். .

நிலவின்றி
பகலில் விதவை கோலம் பூட்டும்
வானம் நானாவேன்
நீயின்றி. . 

உன் கருவிழியில் என் 'கல்லறை' பிம்பம்
தெரியும்முன் சொல்லிவிடு. .
எனை 'காதலிக்கிறேன்' என. .

0 comments:

Ads 468x60px

Social Icons


Animated Social Gadget - Blogger And Wordpress Tips