எரியும் சலனங்கள். .#1

Posted: Thursday 10 January 2013 by துருவன் in
0










எப்போதோ எரித்துப் போட்ட கடிதத்தின் வரிகள் நினைவுகளில் அலையாட கணக்கிறது மனம். .
ஏந்திக் கொள்ளவோ, ஏற்றிவிடவோ அறியாத முகங்களுக்கு என்றும் நேரமிருப்பதில்லை. .
மறந்தும் மறுப்பு சொல்லாமலிருக்க பழகிவிட்ட இதயங்களுக்கும், தூரமிருந்தாவது என் கண்ணீரை துடைக்க எத்தனிக்கும் கைவிரல்களுக்கு என்னில் வழிந்தோடும் கண்ணீரின் கன அளவு தெரிந்தாலும் அஃதின் வெப்பம் தெரிவதில்லை. .
என் பயணங்களை தாங்கிச் செல்லும் காரணிகள் எல்லாவற்றையும் சவப்பெட்டிக்குள் அடக்கிச் செய்ய வைத்த காலத்தோடான பாதையிலேயே என் பாதங்களை பதிக்கிறேன். .
ஏற்றிச்செல்லவோ,ஏந்திக்கொள்ளவோ ஓர் தென்றல் இல்லையேனும் ஓர் புயலாவது நிச்சயம் என் வழியினூடே வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு அணைக்கிறேன் இருள் சூழ வேண்டி இன்றைய விளக்கை. .!

0 comments:

Ads 468x60px

Social Icons


Animated Social Gadget - Blogger And Wordpress Tips